தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்–ஓர் ஆய்வு

தொகுப்பாசிரியர்கள்: முனைவர்.ஐ.சாதிக், பொ.சுரேந்திரகுமார்
வெளியீட்டு எண்:44, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 80, உரூ. 22.00
சாதா அட்டை

தஞ்சை மாவட்ட மக்களிடையே பயன்படுத்தப்படும் மூலிகை மருந்துகளை ஆராயும் நோக்கில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை ஆய்வாளர் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு செய்திகளைத் திரட்டியுள்ளார். நோய்கள் பற்றிய மக்களின் சொந்த அனுபவம், நூல் முறை அனுபவம், கேள்வி அனுபவம், செய்து வரும் சிகிச்சை முறைகள், மருந்து செய்முறை, மூலிகை கிடைக்கும் இடம், தகுந்த அனுமானம், பத்தியம் போன்றவை ஆராயப்பட்டுள்ளன. பல்வேறு நோய்களுக்கான மருந்து செய்முறைகள் என்ற வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

பாமர மக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள நூல்.

News & Events